திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் நாளை 15ஆம் தேதி காலை 11 மணிக்கு உடுமலை வனச்சராக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என உடுமலை வனச்சரகர் வாசு விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.