உடுமலை: தைப்பூசத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரி மனு

82பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வழியாக பழனிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். இவ்வாறு செல்பவர்கள் சொந்த ஊருக்குப் பேருந்துகளில் திரும்புகின்றனர். அப்போது உடுமலை, பொள்ளாச்சி மற்றும் கேரளாவின் பாலக்காடு உட்பட பல்வேறு பகுதிகளில் போதிய பேருந்துகள் இல்லாத நிலையில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். 

எனவே இந்த ஆண்டு தைப்பூசத்துக்காக கோவை-பழனி சிறப்பு இரயில் இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும். மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகிகள் இது குறித்து முன்னதாகவே ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பழனி-பாலக்காடு சிறப்பு இரயில் மூலம் கேரளாவிலிருந்து வரும் பக்தர்களுக்கு பயன்படுவார்கள் என்று உடுமலை ரயில் பயணி நல சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you