உடுமலை ரயில் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை

1பார்த்தது
திருப்பூர் உடுமலை ரயில் நிலையத்துக்கு தினமும் பத்துக்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சுற்றுப்புற தொழிற்சாலைகளில் இருந்து பல்வேறு மூலப்பொருட்கள் பல இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இந்த நிலையில், ரயில் நிலையத்தில் சரக்குகளை கையாளும் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும் என ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் தென்னக ரயில்வேக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவில், ரயில் நிலையத்தின் வளர்ச்சிக்கும், வருவாயை பெருக்கவும் சரக்கு கையாளும் வசதிகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி