திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளபாளையம் பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலுக்கு வெளியே கைகூப்பி நின்ற நிலையில் தம்பதியர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அவர்களது ஆடை, அணிகலன்கள் மற்றும் சிகை அலங்காரத்தை வைத்துப் பார்க்கும்போது, அவர்கள் பாளையத்தை ஆட்சி செய்தவர்கள் போல் தோன்றுகின்றனர். இது போன்ற சிதிலமடைந்த தனி சிற்பங்களைப் பாதுகாக்க தமிழக தொழில் துறை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.