திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோட்டமங்கலம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படாததால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள், சிபிஐஎம் சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.