திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி ராமசாமி நகர் பகுதியில் திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றனர். ஆமை வேகத்தில் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.