திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆண்டியூர் கிராமத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தென்னை, வாழை மரங்களை யானைகள் சேதப்படுத்தியுள்ளன. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். யானைகளை கட்டுப்படுத்த அகழி வெட்டவும், மின்சார வேலி அமைக்கவும், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.