திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி வனச்சரகத்தில் இயற்கை மீதான ஆர்வத்தை அதிகரிக்கவும் மலைவாழ் மக்கள் மேம்பாட்டுக்காகவும் வனத்துறை சார்பில் சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட சூழல் சுற்றுலாத் திட்டம் ஐந்து ஆண்டுகளாக முடங்கியுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட கட்டமைப்புகள் வீணாகி வருவதால், சம்பந்தப்பட்ட வனத்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து, இயற்கை உணவு மற்றும் மலைவாழ் மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சூழல் சுற்றுலாத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.