
தனியார் பஸ் கட்டண உயர்வால் அதிருப்தி
தண்டராம்பட்டு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளில் பயணக் கட்டணம் திடீரென ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தண்டராம்பட்டு, நல்லவன்பாளையம், செட்டிபட்டு, மெய்யூர், நாச்சானந்தல் வரகூர், காம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேலைக்கு வரும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டீசல் விலை உயர்வால் கட்டணம் உயர்த்தப்பட்டதாக பேருந்து ஊழியர்கள் தெரிவித்தனர். தினமும் கூடுதலாக ரூ. 10 செலவாகிறது என பயணிகள் வேதனை தெரிவித்தனர். அரசு இலவச பேருந்துகள் போதிய அளவில் இயக்கப்படாததால் தனியார் பேருந்துகளை நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கட்டண உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை முன் வைத்தனர்.















