ஆரணி - Arani

தனியார் பஸ் கட்டண உயர்வால் அதிருப்தி

தனியார் பஸ் கட்டண உயர்வால் அதிருப்தி

தண்டராம்பட்டு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளில் பயணக் கட்டணம் திடீரென ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தண்டராம்பட்டு, நல்லவன்பாளையம், செட்டிபட்டு, மெய்யூர், நாச்சானந்தல் வரகூர், காம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேலைக்கு வரும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டீசல் விலை உயர்வால் கட்டணம் உயர்த்தப்பட்டதாக பேருந்து ஊழியர்கள் தெரிவித்தனர். தினமும் கூடுதலாக ரூ. 10 செலவாகிறது என பயணிகள் வேதனை தெரிவித்தனர். அரசு இலவச பேருந்துகள் போதிய அளவில் இயக்கப்படாததால் தனியார் பேருந்துகளை நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கட்டண உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை முன் வைத்தனர்.

வீடியோஸ்


திருவண்ணாமலை
மாநிலங்களுக்கு நியாயமான நிதிப் பகிர்வு.. நாளை சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்
Aug 06, 2026, 13:08 IST/

மாநிலங்களுக்கு நியாயமான நிதிப் பகிர்வு.. நாளை சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்

Aug 06, 2026, 13:08 IST
மத்திய வரிகளில் மாநிலங்களுக்கு நியாயமான நிதிப் பகிர்வை உறுதி செய்ய வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் நாளை (ஆக.6) தனித் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. மத்திய வரி பகிர்வு தமிழ்நாட்டின் நிதி நலன்களை பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும், மாநிலங்களின் உரிமைகள் பாதிக்கப்படாத வகையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட உள்ளது. இந்த தீர்மானம் குறித்து சட்டப்பேரவையில் முக்கிய விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.