தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் நினைவு தினத்தையொட்டி, ஆரணி பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆர் சிலை அருகில் தவெக சார்பில் அவரது உருவப் படத்துக்கு மாவட்டச் செயலாளர் எம். சத்யா மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட இணைச் செயலாளர் டி. சத்யராஜ், மாவட்டப் பொருளாளர் எஸ். அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பொதுமக்களுக்கு 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.