பாஜகவின் ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி, தெற்கு மற்றும் கிழக்கு ஒன்றியங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆரணி தெற்கு ஒன்றியத் தலைவராக கேசவன், ஆரணி கிழக்கு ஒன்றியத் தலைவராக பஞ்சாட்சரம் ஆகியோர் மாநிலத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத் தலைவர் கவிதா வெங்கடேசனின் பரிந்துரையின் பேரில், மாநில துணைத் தலைவர் எம். சக்கரவர்த்தி இந்த நியமனங்களைச் செய்துள்ளார். புதிய நிர்வாகிகளுக்கு இளைஞர் அணி மாவட்டத் தலைவர் சரவணன், விவசாய அணி மாவட்டப் பொதுச்செயலாளர் குணாநிதி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டத் தலைவர் ராஜேஷ் மற்றும் பிச்சாண்டி ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.