திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஆரணி 110/33-11 கேவி துணைமின்நிலையத்தில் மே 30 சனிக்கிழமை அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரணி நகரம், சைதாபேட்டை, VAK நகர், சேவூர், ரகுநாதபுரம், முள்ளிப்பட்டு, ஹவுசிங் போர்டு, குன்னத்தூர், அரியப்பாடி, வெள்ளேரி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அமலில் இருக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.