திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி மற்றும் மீன் விற்பனை அதிகாலை முதலே அமோகமாக நடைபெற்று வருகிறது. வார இறுதி நாட்களான இன்று, அசைவ பிரியர்கள் இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இன்றைய கோழி இறைச்சி விலை கிலோ ரூ. 160 முதல் ரூ. 360 வரையிலும், ஆட்டு இறைச்சி கிலோ ரூ. 420 முதல் ரூ. 800 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மீன்களின் விலையும் கிலோ ரூ. 100 முதல் ரூ. 320 வரை உள்ளது.