திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே பெரிய அய்யம்பாளையம் கூட்ரோடு பகுதியில் (வேலூர் - திருவண்ணாமலை சாலை) இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வேலூரை சேர்ந்த கணவன் மனைவி ஸ்ரீதர் மற்றும் சங்கீதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.