திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அரசூர் பகுதியில் உள்ள கல்குவாரியில் பணியாற்றி வந்த திலீப், நேற்று முன்தினம் பணியின்போது மின் ஒயரை சுற்றிக் கொண்டிருந்தபோது மின் கசிவு ஏற்பட்டு உயிரிழந்தார். சக தொழிலாளர்கள் அவரை செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து அனக்காவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.