
தி.மலை: மனைவி அடித்துக்கொலை கணவர் தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில், பூ வியாபாரி கோடீஸ்வரன் தனது மனைவி சிவசங்கரியை தாக்கி கொன்றுவிட்டு, பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. வெளியூரில் படிக்கும் மகன் மனோ பாலாஜி பெற்றோரை தொடர்பு கொள்ள முடியாததால், சிவசங்கரியின் தந்தை வந்து பார்த்தபோது இந்த சம்பவம் தெரியவந்தது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் இந்த துயரம் நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.




















