திருவண்ணாமலை: மாணவர்களுக்கு உதவி தொகை.. கலெக்டர் தகவல்

80பார்த்தது
திருவண்ணாமலை: மாணவர்களுக்கு உதவி தொகை.. கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ஏழ்மையான நிலையில் உள்ள அரசு, அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் பொறியியல், மருத்துவம், பல்மருத்துவம், கால்நடை மருத்துவம், சட்டம், வேளாண்மை ஆகிய தொழிற்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் தங்களது கல்வியை தொடர்வதற்கு ரூ. 50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்வி உதவித்தொகை பெற விரும்புவோர் அரசின் ஒற்றைச் சாளர முறையில் (கவுன்சிலிங்) கல்லூரி சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 

தமிழ்நாட்டில் இருப்பிட சான்று பெற்றவராக இருக்க வேண்டும். தகுதியான நபர்கள் அந்தந்த வட்டங்களில் உள்ள தனி தாசில்தாரிடம் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், ஒற்றைச் சாளர கலந்தாய்வு வழியாக பெறப்பட்ட இடஒதுக்கீடு சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, சாதிச்சான்று, குடும்ப உறுப்பினர் சான்று, குடியுரிமை சான்று, கல்லூரி பதிவாளரிடம் பெறப்பட்ட 7.5 சதவீதம் சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெறவில்லை மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெறவில்லை என்பதற்கான சான்று, கல்லூரி கட்டணம் குறித்த நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி