திருவண்ணாமலை மாவட்டத் தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் சங்கத்தின் மாவட்டப் பேரவைக் கூட்டம் மாவட்டத் தலைவர் வந்தவாசி V. ரவிச்சந்திரன் தலைமையில் செங்கத்தில் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கலந்துகொண்டு உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வின்போது உடன் மாநில நிர்வாகிகள் போளூர் சுரேஷ், கே. முத்து, ஏ. தமிழ்ச்செல்வன், பி.ஆர். வேளாங்கன், ஏ.ஆர். லட்சுமணன், பி. முருககனி, பி. நடராஜன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் செயலாளர் எம். தனஞ்செயன், செங்கம் ஒருங்கிணைப்பாளர் ஏ. சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.