வந்தவாசி அருகே மருதாடு கிராமத்தைச் சேர்ந்த பத்மாவதி என்பவர், தனது கணவர் சுப்பிரமணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய மகளிர் உரிமைத்தொகை ரூ.5000 உதவியால் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். உரிய நேரத்தில் கிடைத்த இந்தத் தொகை தனது கணவரின் உயிரைக் காப்பாற்றியதாகவும், முதல்வர் ஸ்டாலின் சொன்னதைச் செய்பவர் என்பதை இது நிரூபித்துள்ளதாகவும் அவர் கூறினார்.