செய்யாறு: நியாய விலை கடை திறப்பு விழா, எம்எல்ஏ பங்கேற்பு

78பார்த்தது
செய்யாறு: நியாய விலை கடை திறப்பு விழா, எம்எல்ஏ பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஊராட்சி ஒன்றியம், பைங்கினா் கிராமத்தில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ரூ. 7.40 லட்சத்தில் நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டிருந்தது. 

இந்தக் கடையை கிராம மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன் தலைமை வகித்தாா். செய்யாறு ஒன்றியக் குழுத் தலைவா் என். வி. பாபு முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ ஒ. ஜோதி பங்கேற்று நியாயவிலைக் கட்டடத்தை திறந்து வைத்து கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கினாா். 

நிகழ்ச்சியில் அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பாலகோபால், வி.ஏ. ஞானவேல், ஒன்றியச் செயலா்கள், ஏ.ஜி. திராவிடமுருகன், சி.கே. ரவிக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்

தொடர்புடைய செய்தி