திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அழிவிடைத்தாங்கி கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு சமுதாயக்கூடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று (டிசம்பர் 22) திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது உடன் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணி வேந்தன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.