செய்யாறு அடுத்த பாப்பாங்தாங்கல் கிராமத்தில் அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கி இருப்பவர் தங்கவேல், இவரது மகன் தினேஷ்குமார்(23), பெயிண்டர். இவர் கடந்த 1ம் தேதி காலை 9. 30 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரியில் வேலைக்குச் சென்றுள்ளார். மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது சென்னை அடுத்த கும்மிடிப்பூண்டி அடுத்த செட்டிகுப்பம் இலங்கை தமிழர் குடியிருப்பை சேர்ந்த பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கமாகி பேசி வந்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணையில் இளம்பெண்ணும் அவரது வீட்டில் இல்லை என அப்பகுதியில் உள்ள போலீசில் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தினேஷ் குமாரின் தந்தை தங்கவேல் மோரணம் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.