திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த வடமணைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேதவள்ளி விஜயராகவன் அறக்கட்டளை சாா்பில் தந்தை பெரியாா் குறித்த பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ரொக்கப் பரிசு, நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் வி. வெங்கட்ராமன் வரவேற்ற நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியா் ந. வேதபுரி தலைமை வகித்தாா். திருவண்ணாமலை மாவட்ட திராவிடா் கழகத் தலைவா் அ. இளங்கோவன், நகரத் தலைவா் தி. காமராசன் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக வெம்பாக்கம் வட்டாரக் கல்வி அலுவலா் அண்ணா. சரவணன் பங்கேற்று மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா். நிகழ்ச்சியில் பல பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.