சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலசப்பாக்கம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி. பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அவரை பொதுச் செயலாளரும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான என். ஆனந்த் வரவேற்றார். இவர்களுடன் முன்னாள் மாநில எம். ஜி. ஆர் மன்ற துணைச் செயலாளர் பொய்யாமொழி, வழக்கறிஞர் ஆர். சசிகுமார் உள்ளிட்டோரும் தமாகாவில் இணைந்தனர்.