திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே இளங்காடு கிராமத்தில் முனியன் என்பவரின் வீடு இடிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் முகேஷ் மற்றும் அபினேஷ் ஆகிய 2 பள்ளி சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும், ஸ்ரீராம் என்ற 10 வயது சிறுவன் படுகாயங்களுடன் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.