திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து டயர் வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த மினி சரக்கு வேனுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மினி சரக்கு வேன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.