திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, அன்னதானம் வழங்குவோர் உணவு பாதுகாப்புத்துறை மூலம் அனுமதி பெற வேண்டும். தமிழ்நாடு அரசு 252 இடங்களில் அன்னதானம் வழங்க உத்தரவிட்டுள்ளது. பக்தர்களுக்கு நீர், பாதாம் பால், பனங்கற்கண்டு பால் வழங்குவோர் உணவு பாதுகாப்புத்துறை மூலம் அனுமதி பெற வேண்டும். மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்த இடத்தில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும் என உணவுப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.