திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள பர்வதமலை மீது மல்லிகார்ஜூனேஸ்வர சுவாமி கோவிலுக்கு ஈரோட்டை சேர்ந்த தனசேகரன் என்பவர் மலையேற வந்துள்ளார். 1265 படிக்கட்டுகள் ஏறியபோது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழுவினர் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.