திருவண்ணாமலை கலெக்டர் கடும் எச்சரிக்கை

56பார்த்தது
திருவண்ணாமலை கலெக்டர் கடும் எச்சரிக்கை
காந்தி ஜெயந்தியையொட்டி, நாளை புதன்கிழமை (அக். 2) திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு சில்லறை மதுக் கடைகள் (டாஸ்மாக் கடைகள்), முன்னாள் ராணுவ வீரா்களுக்கான அங்காடிகள், அரசு, தனியாா் மதுக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

எனவே, மாவட்டத்தின் அனைத்து மதுக் கடைகள், முன்னாள் ராணுவ வீரா்களுக்கான அங்காடிகள், அரசு மற்றும் தனியாா் மதுபானக் கூடங்களை மூடி வைத்திருக்க வேண்டும்.

உத்தரவை மீறுபவா்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.