தண்டராம்பட்டு: காலவரையற்ற வேலைநிறுத்தம்

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், கிராம நிர்வாக உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலாமுறை ஊதியம் வழங்கக் கோரி, பிப்ரவரி 19 அன்று தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டுள்ளது. வட்டத் தலைவர் அர்ஜுனன், வட்டச் செயலாளர் பச்சையப்பன், பொருளாளர் இளங்கோ உள்ளிட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என சங்கத்தினர் தெரிவித்தனர்.
