போளூா்: காயங்களுடன் இறந்து கிடந்த ஆண் சடலம்

52பார்த்தது
போளூா்: காயங்களுடன் இறந்து கிடந்த ஆண் சடலம்
போளூா் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் காவலா் விஜயலட்சுமியின் கணவா் சிவராஜ் (40). தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தாா். இவா்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனா். 

இவா்கள் ஆத்துரை கிராமத்தில் வசித்து வருகின்றனா். விஜயலட்சுமிக்கும், சிவராஜுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிவராஜ் கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் சுற்றி திரிந்து வந்தாராம். இந்நிலையில் தேவிகாபுரம் - மன்சுராபாத் சாலையில் காட்டுப்பகுதியில் சாலையை ஒட்டி இருசக்கர வாகனத்துடன் விழுந்து காயங்களுடன் இறந்து கிடந்துள்ளாா். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சேத்துப்பட்டு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். 

இதுபற்றி சிவராஜின் தந்தை ராமன் சேத்துப்பட்டு போலீஸில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் (பொ) அல்லிராணி, உதவி ஆய்வாளா்கள் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி