போளூர்: சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணம்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கரைப்பூண்டி அருகே போளூா் - சேத்துப்பட்டு சாலையில், சுமை ஏற்றும் மினி வேன்களில் பொதுமக்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்வதுடன், சிலர் வேனின் பின்புறம் நின்றுகொண்டு ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். இதனால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதுபோன்று பொதுமக்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து, அபராதம் விதித்து, வாகன உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.