
திருவண்ணாமலையில் இத்தாலி நாட்டினர் சாமி தரிசனம்
திருவண்ணாமலை கிரிவலப் பாதை சின்னக்கடை தெருவில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலின் எல்லை காவல் தெய்வமான துர்க்கை அம்மன் கோவிலில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்டவர்கள் சாமி தரிசனம் செய்தனர். மாலை அணிந்து, திருநீர்யிட்டு மனம் உருகி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வு காண்போரை நெகிழ்ச்சியடை செய்துள்ளது.





























