திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் க. தர்பகராஜ் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன், வீட்டுமனை, வேலைவாய்ப்பு, பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், வேளாண்மைத் துறை கடன்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 793 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களைப் பெற்ற ஆட்சியர், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.