திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம், ஆவணியாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ஆவணியாபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் கனிம வளத்துறையின் சார்பில் பள்ளியின் வளர்ச்சி நிதியாக ரூ 104500( ஒரு லட்சத்து நான்காயிரத்து ஐநூறு ) தொகையினை வரையோலையாக இறைவணக்கக் கூட்டத்தில் வழங்கினார். பள்ளியின் சார்பாக பொறுப்புத் தலைமையாசிரியர் D. கோபி உதவி ஆசிரியர் k. குமார் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். உடன் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.