தண்டராம்பட்டு அருகே கீரனூரில் கிணறு வெட்டும் பணியின் போது இரும்பு ரோப் அறுந்து ஜேசிபி வாகனம் கிணற்றுக்குள் விழுந்ததில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த
அஜித்குமார் (28) என்ற டிரைவர் உயிரிழந்தார். மற்றொரு பணியாளரான பரமசிவம் (25) படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.