திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், மதுரவாயில் சட்டமன்ற உறுப்பினர் ரேவந்த் சரண் நேற்று (மே 22) சிறப்பு தரிசனம் செய்தார். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, நவகிரகங்களுக்கு விளக்கேற்றி, கொடிமரம் அருகே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து வழிபட்டார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. திருவண்ணாமலையில்
அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்களின் வருகை அதிகரித்து வருகிறது.