திருவண்ணாமலை மாவட்டம், ஆடையூர் கிராமத்தில் 2011 ஏப்ரல் 25 அன்று ஏழுமலை மகன் ரமேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒன்பது பேரையும் விடுதலை செய்த விசாரணை நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து, அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு விசாரித்தது.