வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை கத்தியைக் காட்டி பொதுமக்களை அச்சுறுத்தியதாக சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார் (23), வந்தவாசி இரட்டைவாடை செட்டித் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் (20), வந்தவாசி ராமசாமி உடையார் தெருவைச் சேர்ந்த முருகன் (23), புன்னை கிராமத்தைச் சேர்ந்த சிவா (20) ஆகிய 4 பேரை வந்தவாசி தெற்கு போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.