கரூர் சம்பவத்திற்கு பிறகு தற்காலிகமாக முடங்கி இருந்த தவெக அரசியல் பணிகள் தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளன. புதிய அணிகளை அமைத்தல், நிர்வாகிகளை நியமித்தல் மற்றும் அரசுக்கு எதிரான அறிக்கைகள் என தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், மாமல்லபுரத்தில் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள தவெக சிறப்பு பொதுக்குழுவில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து, தலைவர் விஜய் எதிர்பாராத ஒரு முடிவை எடுக்கக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.