திருவண்ணாமலை அருகே கவனக்குறைவாக செயல்பட்ட ராமு என்ற ரயில்வே கேட் கீப்பர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில்- காச்சிகுடா நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றபோது ரயில்வே கேட் திறந்துள்ளது. கேட் மூடப்படாமல் இருந்தது குறித்து ரயில்வே நிர்வாகத்திடம் லோகோ பைலட் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் கடலூரில் ரயில்வே கேட் கீப்பர் அலட்சியத்தால் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.