உலகம் முழுவதும் இன்று (மார்ச்.3) 'உலக தோசை தினம்' கொண்டாடப்படும் நிலையில், இதன் தோற்றம் குறித்த சுவாரஸ்யமான வரலாற்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 7-ஆம் நூற்றாண்டில் கர்நாடகாவின் உடுப்பி கோயில் பகுதிகளில் தோசை உருவானதாக கருதப்பட்டாலும், பழந்தமிழ் இலக்கியமான 'சிலப்பதிகாரத்தில்' தோசை போன்ற உணவு குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. பல நூற்றாண்டுகளாக தென்னிந்தியாவின் அடையாளமாக இருக்கும் தோசை தற்போது சர்வதேச அளவில் ஒரு முக்கிய உணவாக மாறியுள்ளது.