தென் தமிழகத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக நெல்லையில் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கின. தென்காசி அருகே 2 பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உச்ச நீதிமன்றத்தின் 53 ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த். பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா உடல்நலக் குறைவால் இன்று காலமானார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்டில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட்.