உலக பட்டினி தினம் நாளை (மே 28) அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, தவெக தலைவரும் முதலமைச்சருமான
விஜய், தமிழகம் முழுவதும் நாளை பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். தொகுதி வாரியாக அனைத்து இடங்களிலும் ஏழை எளிய மக்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்று தவெக மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.