ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

5பார்த்தது
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அருகே பயணிகள் ரயில் முன்னால் சென்ற சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ரயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

தொடர்புடைய செய்தி