நீண்ட தூர ரயில்களில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில், புதிய தூய்மை பணி நடைமுறையை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன்படி, ரயில்களின் உட்புறம் மற்றும் கழிவறைகள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அல்லது தேவைப்படும் போதெல்லாம் உடனடியாக தூய்மைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் சுகாதாரம் சார்ந்த புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், பயணத்தின் போதே தூய்மை பணிகளை தீவிரப்படுத்த ரயில்வே அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது.