திருச்சியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு "கர்தவ்ய த்வார்" என இந்தியில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “தமிழர்களின் சுயமரியாதையை சீண்டிப் பார்க்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். பாஜக அரசின் இந்தித் திணிப்பு, இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது” என்றார்.