தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு மதுரை மாவட்ட திரிஷா நற்பணி மன்றம் போஸ்டர் ஒட்டி கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், “பெண்களின் பெயரை பயன்படுத்தி நகைச்சுவை என்ற பெயரில் இரட்டை அர்த்தத்தில் பேசுவதை ஏற்க முடியாது. எங்கள் அன்பு அக்கா திரிஷா குறித்து யார் தவறாக பேசினாலும் பொறுத்துக்கொள்ள முடியாது. இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால் மாபெரும்
ஆர்ப்பாட்டம் நடத்த நேரிடும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நன்றி: பாலிமர்