நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகரில் நேற்று மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மீண்டும் மின்சாரம் வழங்கிய போது உயர் அழுத்த மின்சாரம் காரணமாக அங்குள்ள வீடுகளில் டிவி, பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின், மிக்ஸி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மின்சாதன பொருட்கள் வெடித்து சேதமானது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டதால் அப்பகுதி இருளில் மூழ்கியது.