தவெக அரசு பொறுப்பேற்ற 13 நாட்களில் சுமார் 30க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய அளவிலான குற்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கோவையில் சிறுமி பாலியல் கொலை, சென்னையில் கானா பாடகர்கள் இரட்டைக் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ள நிலையில்,
திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டின. இதனிடையே பத்திரிக்கையாளர் கேப்ரியல் தேவதாஸ்,
திமுக அரசுக்கு 5 ஆண்டுகளில் ஆட்சி எதிர்ப்பு அலை ஏற்பட்டது. இதே வேகத்தில் சென்றால் தவெக வெறும் ஓராண்டில் அதனை எட்டிவிடும் என எச்சரித்துள்ளார்.